2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் மூலம் ஊரகஸ்மங்ஹந்திய, கோனாபீனுவல, திக்கும்புர மற்றும் வெலிகம நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |