2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குழாய்நீர் விநியோக சேவை தழுவப்படும் பிரதேசத்தை விசாலிப்பதற்காக திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் கீழ் 22 நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு உள்நாட்டு வங்கியினால் வழங்கப்படுகின்ற நிதியத்தின் மூலம் 22 நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சினால் துரிதமாக வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் சுமார் 150,000 பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக நிதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |