• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு பாதிப்புக்கு உள்ளாகின்ற பொதுமக்களின் ஆபத்துக்களைக் குறைத்தல்

- மண்சரிவு ஆபத்துக்கு முகம்கொடுக்கின்ற குடும்பங்கள் உட்பட தோட்டங்கள் சார்ந்த பிரதேசங்களில் வசிக்கும் சமூகங்களுக்கு 50,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் 2015 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் ஏற்கனவே குறித்தொதுக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையின் மீது அண்மையில் மண்சரிவு அனர்த்தத்திற்கு உட்பட்ட தோட்டங்கள் உட்பட தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் எச்சரிக்கை வலயமாக இனங்காணப்பட்டுள்ள தோட்டங்களுக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மனித அபிவிருத்தி பொறுப்பினூடாக வீடுகளை நிருமாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும் கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பொருத்தமான தொழினுட்ப முறைமைகளின் ஊடாக மண்சரிவு அனர்த்தம் ஏற்படக்கூடிய அதிக எச்சரிக்கையைக் கொண்ட பிரதேசங்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் மண்சரிவு ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.