• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லந்த மீரியபெத்த பிரதேச மண்சரிவு காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரணச்சடங்கு உதவிகளை வழங்குதலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதலும்

- மேற்போந்த அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வருமாறு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வழங்கப்பட வேண்டியவர்களை முறையாக இனங்கண்டதன் பின்னர் மேற்போந்த அனர்த்தத்தின் காரணத்தினால் மரணமடைந்த பன்னிரெண்டு (12) பேருக்கும் காணமற்போன இருபது (20) பேருக்கும் ஒருவருக்கு 100,000/= ரூபா வீதம் வழங்குவதற்கும்;

* காயங்களின் தன்மைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு மேற்போந்த அனர்த்தத்தின் காரணத்தினால் காயமடைந்த ஐந்து (05) பேருக்கும் ஒருவருக்கு 50,000/= ரூபா உச்சம் வரை கொடுப்பனவு செய்வதற்கும் ஆரம்பக் கொடுப்பனவாக 10,000/= ரூபாவை வழங்குவதற்கும்;

* மரணச் சடங்கிற்கு மரணமடைந்தவரின் விதவை / தபுதாரர் அல்லது அண்மித்த உறவினருக்கு 25,000/= ரூபா வீதம் வழங்குவதற்கும்.