2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வியியல் பட்டத்தை வழங்குதல் - 19 கல்விக் கல்லூரிகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படுகின்றதுடன் இந்த கல்விக் கல்லூரிகளில் பயிற்சிக்காக வருடாந்தம் ஆட்சேர்ப்புச் செய்யப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை 3000 ஆகும். 2014 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதிலிருந்து ஆரம்பிக்கும் வகையில் கல்விக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு குறித்த முழுமையான கற்கைக் காலப் பகுதியை நான்கு (04) வருடங்களாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள கற்கைக் காலப்பகுதியை மேலும் ஒரு (01) வருடத்தால் நீடிப்பதற்கும் கற்கைப்பாடநெறியை திறம்பட பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களுக்கு கல்வியியல் பட்டத்தை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |