• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ராஜகிரிய, பொல்காவலை மற்றும் கனேமுல்லை ஆகிய இடங்களில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

- வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ராஜகிரிய, பொல்காவலை மற்றும் கனேமுல்லை ஆகிய இடங்களில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கான தேவை இனங்காணப்பட்டுள்ளது. வாகன நெரிசல்களைக் குறைத்தல், விபத்துக்களைக் குறைத்தல், வாகனங்களுக்கான தொழிற்பாட்டு செலவுகளைக் குறைத்தல், முதலியவற்றின் பொருட்டு ராஜகிரியவில் நிருமாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தை மிக விரைவில் நிருமாணிப்பது தேவையானதாகும். புகையிரத கடவைகளில் புகையிரத கதவுகள் எந்நேரமும் மூடப்படுவதன் காரணமாக பாதைகளைப் பாவிப்பவர்கள் முகங்கொடுக்கும் நீண்டகால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு கனேமுல்ல மற்றும் பொல்காவலை பிரதேசங்களில் முக்கியமாக மேம்பாலம் நிருமாணிக்கப்பட வேண்டியுள்ளது. மேற்போந்த 03 மேம்பாலங்களினதும் நிருமாணிப்பிற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.