2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் (KFAED) நிதியளிக்கப்படுகின்ற 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கான கருத்திட்டம் - ஒப்பந்த பொதி 01 இற்கான சிவில் வேலை ஒப்பந்தத்தை வழங்குதல் - 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தின் செலவுகளை ஏற்கும் பொருட்டு 10 மில்லியன் குவைத் தினார்கள் கொண்ட கடன் தொகையொன்று அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்தக் கருத்திட்டதின் கீழ் மேல், தென், கிழக்கு, மத்திய, சப்பிரகமுவ, வடக்கு மாகாணங்களில் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் உள்ள ஒடுங்கிய மற்றும் சிதைவடைந்த நிலையிலுள்ள 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்காக இனங்காணப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் ஒப்பந்தங்கள் 03 பொதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பந்தப் பொதி 01 சார்பில் 08 பாலங்கள் உரியதாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஒப்பந்தப் பொதி 01 இற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |