• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை டவர் ஹில் பிரதேசத்தை மீள் அபிவிருத்தி செய்தல்

- நகர அபிவருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள பாரிய அம்பாந்தோட்டை முதன்மைத் திட்டத்தின் வலய திட்டத்திற்கமைவாக டவர் ஹில் பிரதேசம் கரையோர சுற்றுலா வலயத்திற்குள் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தி செய்து முக்கியமாக நூதனசாலை, கண்காட்சி மண்டபம், தகவல் நிலையம், வாடிவீடு, போன்ற சுற்றுலாத்துறை சார்ந்த சூழலை திட்டமிடுதலும் இனங்காணப்பட்ட தொல்பொருளியல் சார்ந்த நினைவுச் சின்னங்களை புனரமைத்து பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்காக இனங்காணப்பட்ட 10 காணித் துண்டுகளை வழங்குவதற்கும் இந்தக் காணிகளை குறித்தொதுக்குவதற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காகவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.