• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாவர பரிசோதனை மற்றும் எதிர்காப்பு நடவடிக்கைகளின் மீதான ஒத்துழைப்பிற்காக இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

- கமத்தொழில் உற்பத்தி, வனவளப் பாதுகாப்பு உட்பட வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்குள்ளும் சீனாவுக்குள்ளும் களைகள் உட்செல்வதையும் பரவுவதையும் தடுப்பதன் மூலம் பயிர் உற்பத்தி வர்த்தகத்தை மேம்படுத்துவது இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் எதிர்பார்க்கப் படுகின்றது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.