2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நேபாளம் லும்பினி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள துட்டகைமுனு யாத்திரிகர் விடுதி - யாத்திரிகர்களின் பயன்பாட்டிற்காக நேபாளம் லும்பினி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள துட்டகைமுனு யாத்திரிகர் விடுதிக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுத் திறைசேரியிலிருந்து 20.72 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கும் பொருட்டு புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |