• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் சட்டம் பற்றிய நீதிமன்றம்சார் ஆற்றல் விருத்திக்கான தெற்காசிய நிலையமொன்றைத் தாபித்தல்

- சுற்றாடல் சட்டம் மற்றும் நிலைபேறுடைய பசுமை அபிவிருத்தி துறைகளில் தெற்காசிய நாடுகளின் நீதித்துறைசார் ஆற்றல் விருத்தியின் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து, இந்த நோக்கங்களின் நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைப்பதற்காக இலங்கையின் கனம் பிரதம நீதியரசரின் அலுவலகத்தில் அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் வினைத்திறன் கொண்ட அலகொன்றைத் தாபிப்பதற்குத் தேவையான ஆரம்ப நிதி ஏற்பாடுகள் உட்பட நிறுவன ரீதியிலான உதவி வழங்க வேண்டுமெனப் பிரேரித்து, 2014 ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட சுற்றாடல் நீதி மற்றும் நிலைபேறுடைய பசுமை அபிவிருத்தி பற்றிய தெற்காசிய பிரதம நீதியரசர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப விழாவின்போது என்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை) பிரதம நீதியரசர்களினாலும் சிரேட்ட நீதியரசர்களினாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆரம்ப நடவடிக்கைக்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டமும் அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியும் முன்வந்துள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சுற்றாடல் மற்றும் நிலைபேறுடைய அபிவிருத்திக்குரிய சட்ட விடயங்கள் சம்பந்தமாக நீதிமன்ற ஆற்றல் விருத்தித் துறையில் சிறந்த நிலையமொன்றாக இலங்கை மாறும். இந்த வலயத்தின் நீதிமன்றம்சார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை கூட்டாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு இந்த நிலையமானது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், உலக வங்கி உட்பட ஏனைய அமைப்புகளுடனும் மிக நெருக்கமாக செயற்படும்.

சுற்றாடல் சட்டம் பற்றிய நீதிமன்றம்சார் ஆற்றல் விருத்திக்கான தெற்காசிய நிலையமொன்றை இலங்கையில் தாபிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: