2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுற்றாடல் சட்டம் பற்றிய நீதிமன்றம்சார் ஆற்றல் விருத்திக்கான தெற்காசிய நிலையமொன்றைத் தாபித்தல் - சுற்றாடல் சட்டம் மற்றும் நிலைபேறுடைய பசுமை அபிவிருத்தி துறைகளில் தெற்காசிய நாடுகளின் நீதித்துறைசார் ஆற்றல் விருத்தியின் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து, இந்த நோக்கங்களின் நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைப்பதற்காக இலங்கையின் கனம் பிரதம நீதியரசரின் அலுவலகத்தில் அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் வினைத்திறன் கொண்ட அலகொன்றைத் தாபிப்பதற்குத் தேவையான ஆரம்ப நிதி ஏற்பாடுகள் உட்பட நிறுவன ரீதியிலான உதவி வழங்க வேண்டுமெனப் பிரேரித்து, 2014 ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட சுற்றாடல் நீதி மற்றும் நிலைபேறுடைய பசுமை அபிவிருத்தி பற்றிய தெற்காசிய பிரதம நீதியரசர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப விழாவின்போது என்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை) பிரதம நீதியரசர்களினாலும் சிரேட்ட நீதியரசர்களினாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. |