• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் நிதியுதவியளிக்கப் படும் களனி கங்கைக்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்

- மதியுரைச் சேவை வழங்கல் - மேற்போந்த கருத்திட்டத்தின் செலவுகளை ஏற்பதற்காக யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் 35,020 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட கடன் தொகையொன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவேயுள்ள புதிய களனிப்பாலத்திற்கு அருகாமையில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவது இந்த கருத்திட்டத்தின் நோக்கமாகும். களனி கங்கைக்கு குறுக்காக மற்றுமொரு புதியபாலமொன்றை நிருமாணித்தல், துறைமுக நுழைவு பாதையை நிருமாணித்தல், ஒருகொடவத்தை, இங்குருகடே, களனிதிஸ்ஸ சந்திகளில் மாற்று இடங்க​ளை நிருமாணித்தல் அததுடன் ஒருகொடவத்தை, களனிதிஸ்ஸ சந்திக்கு அருகாமையிலுள்ள வீதிகளை மேம்படுத்துத்தல் என்பன இந்த கருத்திட்டத்தில் சேரும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.