2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையத்திற்காக கட்டடமொன்றை நிருமாணித்தல் - போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மதியுரைச் சேவை, மத மற்றும் கலைச் செயற்பாடுகள், கல்வி நடவடிக்கைகள், தொழில் பயிற்சி உட்பட விளையாட்டுக்கள் மூலம் புனர்வாழ்வளித்து சிறந்த பிரசைகளாக சமூகத்தில் இணைப்பதற்கு புறம்பான நிலையமொன்றை தாபிப்பதற்குத் தேவையான கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டும் இந்த கருத்திட்டத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டும் புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |