2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு அதிவேகப் பாதை விரிவாக்கல் கருத்திட்டம் - நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம் - ஏற்கனவே தெற்கு அதிவேகப் பாதையின் கொட்டாவையிலிருந்து கொடகம வரையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்தராவையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை இணை வீதியுடன் அதிவேகப் பாதையை கொடகமையிலிருந்து மத்தள வரை வெவ்வேறாக நான்கு பகுதிகளாக நீடிப்பதற்குரிய சிவில் வேலைகளுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |