2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தை திருத்துதல் - 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்த்திற்கு அமைவாக இலங்கை பொலிஸ் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் சனத்தொகை 2.5 மில்லியனாகும். தற்போது இலங்கையின் சனத்தொகை அண்ணளவாக 21 மில்லியனாவதோடு, பொலிஸ் படையானது அண்ணளவாக 84,000 பேர்களாவர். ஆதலால், நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு பொலிஸ் கட்டளைச்சட்டமானது திருத்தப்படுவது தேவையானதென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக இயைபுள்ள நோக்கங்களுக்காக திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காக சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |