2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக அலுவலகங்களையும் உத்தியோகபூர்வ இல்லங்களையும் நிருமாணித்தல் - இலங்கையின் மொத்த காட்டுப் பிரதேசத்திலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள காடுகளின் அளவு 41 சதவீதமாவதோடு, கடந்த காலத்த்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இந்த மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிக்களப் பணிகள் முற்றுமுழுதாக தடைப்பட்டிருந்தது. இந்த இரண்'டு மாகாணங்களிலும் 04 மாவட்ட வன அலுவலகங்களை நிருமாணிப்பதற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |