2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராஜ்யத்திற்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இருபக்க உடன்படிக்கை - குற்ற நடவடிக்கைகளின் போது பரஸ்பரம் சட்ட உதவிகளைப் பற்றிய உடன்படிக்கையின் மூலம் குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்தல், வழக்குத் தொடுத்தல், குற்றச் செயல்களை தடுத்தல், குற்றச் செயல்களின் மூலம் உழைத்த சொத்துக்களை அரசுடமையாக்குதல் தொடர்பில் இருதரப்பினர்களினதும் சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேற்போந்த உடன்படிக்கையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |