2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
லோட்டஸ் வீதியிலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியிலிருந்து ஒரு ஏக்கரை பொலிஸ் திணைக்களத்திற்கு உடைமையாக்குதல் - லோட்டஸ் வீதியிலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் கோட்டை பொலிஸ் நிலையத்தை மீளத் தாபிப்பதற்கு பொருத்தமான பிரதேசமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக லோட்டஸ் வீதியிலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியிலிருந்து ஒரு ஏக்கர் காணியை பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |