• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OFID) நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - நிருமாணிப்பு கண்காணிப்புக்கான மதியுரைச் சேவையை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்

- பிரதான நெடுஞ்சாலைகளை 65.45 கிலோ மீற்றர் வரை தரமுயர்த்துவதற்கும் நாரஹேன்பிட்ட - நாவல - நுகேகொட வீதியின் 2/1ஆம் இலக்க பாலத்தை மீள நிருமாணிப்பதற்குமான கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் செலவுகளை ஏற்பதற்காக சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திலிருந்து 50 மில்லியன் யுஎஸ் டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்று இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கருத்திட்டத்தின் கீழான சிவில் வேலைகளின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை கையளிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.