2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உணவு விநியோகத்தின் பொருட்டு பங்காளதேஷ் அரசாங்கத்திடமிருந்து 50,000 மெ.தொன் அரிசி பெற்றுக்கொள்ளல் - அண்மையில் வரும் விழாக்காலத்தில் உருவாகும் கேள்வியை ஈடுசெய்யும் பொருட்டு லங்கா சதொச லிமிட்டெட் நிறுவனத்தின் உடாக அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு என்னும் அடிப்படையில் 50,000 மெ.தொன் அரிசியை பங்களாதேஷிலிருந்து கொள்வனவு செய்து நுகர்வோருக்கு ஏற்ற விலைக்கு விற்பனை செய்யும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |