2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முல்லைத்தீவு - கொக்குளாய் - புல்மோட்டை பாதையின் கொக்குளாய் களப்பு ஊடாக கொக்குளாய் பாலம் மற்றும் அதன் நுழைவாயிலை நிருமாணித்தல் - 38,000 ம் கிராமங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வீதி வலையமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் கிராமிய பிரதேசங்களில் வாழும் மக்களின் சுமார் 80 சதவீதத்தினை விட சிறந்த வீதிக்கான இடவசதி உருவாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையில் கரையோர பிரதேசத்தின் ஊடாக தொடர்ச்சியான நில பிரதேச இணைப்பிணை ஏற்ப்படுத்துத்தும் நோக்குடன் முல்லைத்தீவு - கொக்குளாய் - புல்மோட்டை பாதையை அபிவிருத்திக்கான முன்னுரிமை பாதையொன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்கும் புல்மோட்டைக்கும் இடையில் 100 கிலோ மீற்றர் தூரத்தினைக் குறைத்து கொக்கிளாய் களப்பினூடாக பாலமொன்று நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்கான கடன் உடன்பாட்டிற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |