• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வொஷிங்டன் நகரத்தில் நடாத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்குரிய உலக வங்கியின் / சருவதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டங்களில் பங்குபற்றல்

- சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பொது திறைசேரியினதும் இலங்கை மத்திய வங்கியினதும் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்போந்த வருடாந்தக் கூட்டங்களில் பங்குபற்றியது. இந்தக் கூட்டங்களில் உயர் பொருளாதாரம், அபிவிருத்தி அடைந்துவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குரியதாக எழுந்துவரும் பொருளாதார, அரசியல், சமூக பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதார எதிர்கால நோக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த பிரதிநிதிகளினால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பயனுள்ள வகையில் கலந்துரையாடல்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் இந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.