• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துதல்

- ஏற்கனவே நாட்டின் குழாய் மூலம் குடிநீர் 44 சதவீதம் தழுவப்படுகின்றது. அரசாங்கத்தினால் 2020 ஆம் ஆண்டளவில் குழாய் மூலம் குடிநீர் வழங்குதலானது 60 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப் படுகின்றதோடு, இந்த நோக்கத்திற்காக உள்நாட்டு வங்கிகளின் மூலம் நிதியளித்து உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களை ஈடுபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 30 நீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக 29.1 பில்லியன் ரூபாவும் 4 மேலதிக நீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக மேலதிகமாக 10.095 பில்லியன் ரூபாவும் முதலீடு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பின்வரும் நீர் வழங்கல் கருத்திட்டங்களை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II; அத்துன் * அட்டம்பிட்டிய நீர் வழங்கல் கருத்திட்டம்.