2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சிற்கும் ஸ்பெயின் இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள், ஒத்துழைப்பு அமைச்சிற்கும் இடையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை - இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மீது ஒத்துழைப்புக்காக பிரேரிக்கப் பட்டுள்ள துறைகளுக்குள் பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டி செயற்படும் குற்றங்களுக்கு எதிராக செயற்படுதல், நீர், துப்பரவேற்பாடு, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, கல்வி , கலாசார பரிமாற்றம், கமத்தொழில் மற்றும் சுற்றாடல் கொள்கை, நிலைபேறுடைய சுற்றுலாத்துறை, நிறுவனங்களின் தாபிப்பு தொடர்பிலான ஒத்துழைப்பு அதேபோன்று ஐக்கிய நாடுகளின் நோக்கக் கட்டமைப்பிற்குள் பல்புடை ஒத்துழைப்பு போன்றவை உள்வாங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக் கிடையில் கைச்சாத்திடப்பட்ட மேற்போந்த புரிந்துணர்வு உடன் படிக்கையை வலுவாக்கம் செய்யும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |