2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - கண்டி நகர நீர் வழங்கல் முறைமைகளின் புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்குமான வடிவமைப்பு, நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்ளல் - கண்டி நகரத்தில் செய்யப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தி நோக்கங்களில் ஒன்று கண்டிநகர நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துவதும் புனரமைப்பதுமாகும். இதன் வடிவமைப்புக்கும் நிருமாணிப்பு மேற்பார்வைக்குமான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |