2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - கிராமிய கேந்திர நிலையங்களுடன் கிராமிய வீதி இணைப்பினை உறுதிசெய்யும் பொருட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு, இந்த நோக்கத்திற்காக 6 கட்டங்களில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துக்கொண்டுள்ளது. இந்த மொத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் அரசாங்கத்தின் முதலீடு 106 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தக் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 5 கருத்திட்டங்களாக கிராமிய கேந்திர நிலையங்களான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தெற்கு, சப்புரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும் சமூக பொருளாதார நிலையங்களுக்குத் தொடர்புபடுத்தப்படும். இந்தக் கருத்திட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண வீதிகள் உட்பட கிராமிய நுழைவுப் பாதைகள் 2,548 கிலோ மீற்றர்களும் தேசிய நெடுஞ்சாலையின் 118 கிலோ மீற்றர்களும் தழுவப்படும். கடன் உடன்படிக்கைகளுக்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |