2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியங்களின் மூலம் கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகரங்களுக்கான நீர் வழங்கல் கருத்திட்டம் - III ஆம் பொதியை நடைமுறைப்படுத்துதல் - ஹோமாகம, பாதுக்க, சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகள் சம்பந்தமாக மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் உரிய உள்நாட்டு வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |