• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புரகமுவ மாகாணத்தின் மாதிரி இரண்டாம்நிலை தேசிய பாடசாலையை இரத்தினபுரி நகரில் தாபித்தல்

- சப்புரகமுவ மாகாணத்திற்குள் புதிய தேசிய பாடசாலையொன்றை இரத்தினபுரி நகரத்திற்கு அருகாமையில் உள்ள காணித்துண்டொன்றில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. நிருமாணிப்புப் பணிகள் 2014 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, நிருமாணிப்பு பணிகள் மூன்று (03) வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இந்த பாடசாலை தரம் 6 இல் இருந்து தரம் 13 வரை சமமான10 வகுப்புக்களைக் கொண்டிருக்கும். இதற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.