2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறைசேரி முறிகளின் மீது உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - கந்தேகெட்டிய நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - கந்தேகெட்டிய நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் கந்தேகெட்டிய பிரதேச செயலகப் பிரிவின் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தழுவப்படுவதோடு, கருத்திட்ட பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட நீர் இணைப்புகளின் அளவு 4000 ஆகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |