2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கப்பல்களிலிருந்து கரையோரம் வரை 4 கொள்கலன்களை கையாளும் பாரம்தூக்கிகளையும் 12 இறப்பர் டயர்களுடனான கென்றி பாரம்தூக்கிகளையும் வழங்கிப் பொருத்தி செயற்படுத்துதல் - கொழும்பு துறைமுக விரிவாக்கல் கருத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று அந்தலைகளில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரே அந்தலையாவது கிழக்குக் கொள்கலன் அந்தலையாகும். கிழக்குக் கொள்கலன் அந்தலையின் ஆரம்ப கையாள்கை பணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அதுசார்ந்த செயற்பாடுகளை நடாத்திச் செல்லும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |