2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்துவதற்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல் - வயம்ப பல்கலைக்கழகம் 04 பீடங்களையும் 16 கற்கைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. வர்த்தகக் கல்வி மற்றும் நிதி பீடத்திற்கும் அதேபோன்று பிரயோக விஞ்ஞான பீடத்திற்கும் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கு உத்சதேசிக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்ட தொழினுட்ப பாட விதானத்தின் கீழ் 100 பட்டதாரி அபேட்சகர்கள் 2016 ஆம் ஆண்டிலிருந்து புறம்பான கற்கை பிரிவொன்றுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி பணிகளுக்குத் தேவையானதும் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ளதுமான குளியாப்பிட்டியவிலுள்ள காணித் துண்டை கொள்வனவு செய்வதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |