• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“ஆரோக்கியமான இலங்கை" தேசிய சுகாதார நிகழ்ச்சித் திட்டம் - 2014

- பொது மக்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் 157 பில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2014‑12‑01 ஆம் திகதியிலிருந்து 2014‑12‑07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை “ஆரோக்கியமான இலங்கை" தேசிய சுகாதார நிகழ்ச்சித் திட்டம் - 2014” என்பதற்கான வாரமாக பிரகடனப்படுத்தும் பொருட்டும் இந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை இயைபுள்ள அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுடன் ஒருங்கிணைந்து நடாத்துவதற்கும் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.