2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குருநாகல் நகர அழகுபடுத்தல் கருத்திட்டம் - குருநாகல் நகரம் வடமேல் மாகாணத்தின் பிரதான நகர கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. பொது மக்களுக்கு ஓய்வு மற்றும் களியாட்ட வசதிகளை வழங்குவதோடு நகரத்தின் புவியியல் நிலைமையை கலைநுணுக்கத்துடன் விரிவுபடுத்தும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் குருநாகல் குளத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசத்தை அழகுபடுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டு கருத்திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 217.00 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் இந்தக் கருத்திட்டத்திற்குரிய பணிகளை நடாத்திச் செல்லும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |