• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் மற்றும் காடு தொடர்பிலான சருவதேச மாநாடு - 2014

- ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் வனவியல் பீடத்தினால் சுற்றாடல் மற்றும் காடுகள் தொடர்பிலா ன சருவதேச மாநாடு 2014 ஒக்ரோபர் மாதம் 24 - 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதுடன் இந்த மாநாட்டின் பெறுபேறுகளை சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சும் அதனோடிணைந்த நிறவனங்களினதும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுற்றாடல் மற்றும் வனவியல் பீடத்தின் வளவாளர்களின் தொழினுட்ப பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.