2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பர வேற்பாட்டுக் கருத்திட்டம் - பளை, கொடிகாமம், நல்லூர், கரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபை (Old park) போன்ற பிரதேசங்களில் நீர் தாங்கி கோபுரங்களை நிருமாணித்தல் (பொதி - 2)" - இந்தக் கருத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கான 13 பிரதான பொதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இது அவ்வாறானவொரு பொதியாகும். இந்தக் கருத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ் மற்றும் இலங்கை அரசின் நிதியளிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு மேற்போந்த கேள்வியை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு வழங்குவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |