2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக ஒருங்கிணைப்பு வாரம் - 2014 முன்னேற்ற மீளாய்வு - சமூக ஒருங்கிணைப்பு வாரத்தில் (2014 யூலை 14 தொடக்கம் 20 வரை) 23 மாவட்டங்களில் மொழிச் சங்கங்களின் உறுப்பினர்களினால் 23 சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக மொழியைக் கற்பித்தலும் எண்ணக்கருக்களை மாற்றியமைப்பதன் ஊடாக இனங்களுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்து தலுக்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மொழிச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முடியுமாயின. இக்காலப் பகுதிக்குள் மொனராகலை மற்றும் புத்தள பிரதேச செயலகப் பிரிவுகளில் பாடசாலை உபகரண விநியோகங்களும் மும்மொழியிலான விளம்பரப் பாதாதைகள் தயாரித்தலும் மேற்கொள்ளப்பட்டன. இந்த வாரத்திற்குள் தேசிய ஒருங்கிணைப்பும் அதனோடிணைந்த பிற நிகழ்ச்சித்திட்டங்கள் சிலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. |