2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டவிரோத விலைப்படுத்துதலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்குமான நியம செயற்படு முறைமைகள் (SOP) - நீதி அமைச்சின் செயலாளரின் தலைமையின் கீழ் "சட்டவிரோத விலைப் படுத்தலுக்கு எதிரான தேசிய படையணி" இனால் சட்டவிரோத விலைப் படுத்துதலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப் பதற்குமான நியம செயற்படு முறைமைகள் வகுத்தமைக்கப்பட்டுள்ளன. இந்த நியம செயற்படு முறைமைகளின் நோக்கமானது சட்டவிரோத விலைப் படுத்தலுக்கு எதிராக இலங்கையின் முயற்சியில் ஆக்கத்திறனை அதிகரிப்பதாகும். நியம செயற்படு முறைமைகள் எனப்படுவது பாதிக்கப் பட்டவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் பாதிக்கப் பட்டவர்களை பாதுகாப்பதனையும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதனையும் திறம்பட மேற்கொள்வதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது அவர்களது பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் தொடர்பில் அரசாங்க தரப்பினர்களுக்கு திறனுட்பப்படுத்தும் பொருட்டு சருவதேச சமவாயத்திற்கு ஏற்புடையதாக வகுத்தமைக்கப்பட்ட தேசிய திறமுறையாகும். நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவிரோத விலைப்படுத்துதலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்குமான நியம செயற்படு முறைமைகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |