2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் தேசிய நோய் எதிர்ப்பு சக்திக் கொள்கை - இந்த கொள்கையின் பிரதான நோக்கமானது பொது மக்களின் சுகாதாரத் தேவைப்பாடுகளுக்கு உரியவாறு பயனுள்ள பாதுகாப்பும் தரம்வாய்ந்ததுமான தடுப்பூசிகளை திறமுறையானதும் நியாயமானதுமான விதத்தில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையில் தடுப்பூசிகளினூடாக தடுக்கக் கூடிய நோய்கள் அற்ற நாடாக ஆக்குவதாகும். சுகாதார அமைச்சு, உரிய தொழில்சார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் உட்பட சகல தரப்பினர்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டு இந்த நோய் தடுப்பு கொள்கை வகுத்தமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |