2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சர்வதேச உறவுகள் நிலையமொன்றை கிழக்கு மாகாணத்தில் தாபிப்பதற்காக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - கிழக்கு மாகாண மக்களின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மீள் நிருமாண பணிகளின் பொருட்டு பல்வேறுபட்ட நிருவாக சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவை அரசாங்கத்தினால் கவனத்திற்கு எடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பொருத்தமான நிருவாக, சமூக பின்னணியொன்றை உருவாக்கும் நோக்குடன் வடமாகாணத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழிப்படுத்தல் நிலையத்திற்குச் சமமான "கிழக்கு மாகாண சருவதேச உறவுகள் நிலையம்" என்னும் பெயரில் செயற்பாட்டு நிலையமொன்றை லாகுகல, பானம பிரதேசத்தில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாக்களில் ஈடுபடும் அரசாங்க தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும் அதேபோன்று சருவதேச மட்ட கலந்துரையாடல்கள் உட்பட சம்மேளனங்களை நடாத்துவதற்குமான வசதிகளை வழங்குவதற்கும் இந்த நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |