2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசாங்க மதியுரை நிறுவனமொன்றைத் தாபித்தல் - அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களுடன் இணைந்து உள்நாட்டு தொழில்சார்பாளர்கள் விசேடமாக பொறியியலாளர்கள் நெடுஞ்சாலைகள், நீர்வழங்கல் திட்டங்கள், சக்தி வழங்கல் போன்றவற்றுக்குரிய நிருமாணிப்பு மேற்பார்வை, வடிவமைப்பு தொடர்பில் பல்வேறுபட்ட அனுபவங்களையும் பரந்துபட்ட அறிவையும் கடந்த பத்துவருடங்களாக பெற்றுள்ளனர். கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான மதியுரை கம்பனியொன்றைத் தாபிப்பதற்கும் அது தொடர்பிலான பணிகளை மேற்கொள்வதற்குமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |