• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கியின் மூலம் வழங்கப்படுகின்ற நிதியத்தின் ஊடாக மெல்சிறிபுர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

- மேற்போந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் 2015 மார்ச் மாதத்தில் மெல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 40,189 பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு வங்கிகளின் நிதி உதவியுடன் 2,460 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்காக தொழினுட்ப மற்றும் நிதி பிரேரிப்புகளைக் கோருவதற்கும் மதிப்பீட்டு செயற்பாட்டின் போது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் ஒத்தாசையைப் பெறுவதன் பொருட்டும் கருத்திட்டக் குழுவொன்றை நியமிப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.