• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்தினால் நிதியளிக்கப்படுகின்ற கொழும்பு தேசிய நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - ஶ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவ மனைக்கான நுழைவாயில், தெமட்டகொட - வெல்லம்பிட்டி வீதி, கொலன்னாவ - யக்பெத்த வீதி, வெலிக்கடை - கொஹிலவத்த வீதி, மத்திய வீதி போன்ற வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

- பிரதான நெடுஞ்சாலைகளில் 66 கிலோ மீற்றர்களை தரம் உயர்த்துவதற்கும் நாராஹேன்பிட - நுகேகொடை பாலத்தை மீள நிருமாணிப்பதற்குமான செலவுகளை ஏற்கும் பொருட்டு 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று சருவதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.