• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச அபிவிருத்தி சங்கத்தினால் நிதியளிக்கப்படுகின்ற காலநிலை தாக்கத்தை குறைக்கும் கருத்திட்டம் (CRIP) தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் மண்சரிவைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுதலும் திட்டங்களை வகுத்தலும் நிருமாணிப்பு மேற்பார்வைக்காக உசாத்துணை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்த வழங்கல் நடைமுறைத் திட்டத்தின் ஊடாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்குதல்

- காலநிலை தாக்கத்தை குறைக்கும் கருத்திட்டத்திற்கான செலவுகளை ஏற்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு சருவதேச அபிவிருத்தி சங்கத்தினால் கடன்தொகையொன்று கிடைக்கப் பெற்றுள்ளதோடு, சரிவுகளை நிலைப்படுத்தலுக்காக முதலீடு செய்யும் பொருட்டு இந்தத் தொகையிலிருந்து 29 மில்லியன் ஐக்கிய டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துணை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட் பின்வரும் வீதிகளின் சரிவுகளை நிலைப்படுத்தல் திட்டமிடல் , புலனாய்வு செய்தல் என்பன தெரிவு செய்யப்பட்ட மதியுரைஞர் ஒருவரினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

* கண்டி - மஹியங்கனை வீதி (A 026)
* பேராதனை - பதுளை - செங்கலடி வீதி (A 005)
* கொழும்பு - இரத்தினபுரி - வெல்லவாய - மட்டக்களப்பு வீதி (A 004)
* கேகாலை - புளத்கொஹூபிட்டிய - கரவனல்ல வீதி (A 021)
* அவிசாவலை - ஹட்டன் - நுவரெலியா வீதி (A 007)

இதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: