2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த சருவதேச சீனிக் கைத்தொழிலாளர்களின் அமைப்பின் 49 ஆவது கூட்டத்தொடரை கொழும்பில் நடாத்துதல் - 88 நாடுகளின் உறுப்பாண்மையுடன் ஐக்கியநாடுகள் அமைப்பின் துணை சருவதேச சீனிக் கைத்தொழிலாளர்களின் அமைப்பின் 49 வது கூட்டத் தொடரை 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் நடாத்துவதற்காக சீனி கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |