2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பிரதான அலுவலகக் கட்டடத்தொகுதிக்காக இரண்டு காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல் - கணக்காளர் தொழிலுக்கும் நிதித்துறைக்கும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கியுள்ள சேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நிறுவனத்தினால் அபி்விருத்தி செய்து நீண்டகால குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் கொழும்பு 07, மலலசேக்கர மாவத்தையிலுள்ள காணித் துண்டுகள் இரண்டையும் இறையிலிகொடையொன்றாக இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கு குறித்தொதுக்குவதற்காக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினாலும் கூட்டுறவு, உள்நாட்டு வியாபார அமைச்சர் மாண்புமிகு ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |