2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிதி ஒழுங்குவிதி - 2015 - 2013 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் வெளிப்படுத்தப்பட்டவாறு நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு மிகவும் ஏற்றவாறும் நிதி ஒழுங்குவிதியை கடைப்பிடிப்பது இலகுவாக்கும் முயற்சியாக நிதி ஒழுங்குவிதியை மேலும் திருத்தும் பணியானது பொதுத் திறைசேரியினால் கையேற்கப்பட்டது. இந்த நிதி ஒழுங்குவிதியின் மூலம் அரசாங்க நிதி முகாமைத்துவத்தின் மூலதத்துவங்கள் உட்பட பொறுப்புக் கூறல் மேம்பாட்டின் பொருட்டு திட்டமிடல், வரவுசெலவுத்திட்டம் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை, கணக்கிடல், கணக்காய்வு உட்பட அறிக்கையிடல் போன்ற அரசாங்க நிதி முகாமைத்துவம் மற்றும் அதுசார்ந்த துறைகள் சம்பந்தமான பரந்துபட்ட கட்டமைப்பும் அடிப்படை சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் திகதியொன்றிலிருந்து 2015 ஆம் ஆண்டிலே செயல்வலுவாக்கம் செய்யப்படும் என்னும் அடிப்படையில் நிதி ஒழுங்குவிதியிலுள்ள ஏற்பாடுகள் சம்பந்தமாக அறியச் செய்விக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று நிதி, திட்டமிடல் அமைச்சின் பயிற்சி நிறுவனமான "மிலோதா" நிதி கல்வி நிறுவனத்தின் ஊடாக நடாத்துவதற்கும் அதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்குமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |