2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு பீடமொன்றைத் தாபித்தல் - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிவில் மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பினை வழங்கும் நோக்கில் இந்த பல்கலைக்கழகத்தின் தெற்கு பீடம் சூரியவெவ பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த தெற்கு பீடமானது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து (05) வருடகாலத்திற்குள் மூன்று (03) கட்டங்களாக நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |