2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாவுல நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல் - மாவத்தளை மாவட்டத்தில் கமத்தொழில், போக்குவரத்து. சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் ஏனைய நகர அபிவிருத்தி பணிகளுக்காக அதிகரித்துவரும் கேள்வியுடன் இந்த மாவட்டத்தின் நாவுல நகரம் பிரதேச நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட நகரமொன்றாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப் பட்டுள்ளது. 6.7884 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி நாவுல நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |