2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுர நகர மத்தியிலுள்ள அரசாங்கக் காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல் - அநுராதபுரம் மாநகர சபை அதிகார பிரதேசத்திற்குள் வசிக்கும் மக்கள் தொகை சுமார் 51,000 ஆகும். நாட்டில் நிலவும் சமாதான நிலைமை காரணமாக அநுராதபுரத்திற்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, நகரத்தில் பகல் பொழுதில் சுமார் 100,000 பேரளவில் காணப்படுகின்றனர். புண்ணியபூமி பிரதேசத்தில் பொதுவசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நகரத்தில் மேற்கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையானது நகரத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளை மிக நெருக்கமாக மேற்பார்வை செய்கின்றது. இந்த மீள் அபிவிருத்தி நோக்கங்களுக்காக அநுராதபுரம் மைத்திரிபால சேனநாயக்க மாவத்தையின் 1 ஆம் ஒழுங்கையிலுள்ள 228.9 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |