2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவதை இலகுபடுத்தும் பொருட்டு நல்லிணக்கத்திற்கான விசேட பணியகமொன்றைத் தாபித்தல் - சனாதிபதியின் செயலாளரின் தலைமைத்துவதின் கீழ் குழுவொன்று தேசிய செயற்பாட்டுத் திட்டத்திலுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் 144 சிபாரிசுகளை செயற்படுத்துவது தொடர்பில் நுணுக்கமாக ஆராயும் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, இதில் 45 சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அத்துடன் 89 செயற்பாட்டு மட்டத்திலும் 10 ஆரம்ப செயற்பாட்டு மட்டத்திலும் உள்ளன. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதனை நுண்ணாய்வு செய்யும் குழுவின் நடவடிக்கைகளுக்கு வசதிகளை அளிக்கும் பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமைத்துவதின் கீழ் செயற்படும் நல்லிணக்கத்திற்கான விசேட பணியகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |